Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிடங்கில் வனத்துறையினர் 10 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, குற்றவாளியான கதிரவனை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக சென்னை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான 10 பேர் கொண்ட வேட்டைக்காரர்கள் கடந்த 10 நாள்களாக பாப்பரம்பாக்கத்தில் சோதனை செய்துவந்தனர். இந்நிலையில் முரளி என்பவருக்கு சொந்தமான கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மற்றொரு வன பாதுகாவலர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
விசாரணையில் முரளிக்கு சொந்தமான கிடங்கை கதிரவன் என்பவர் வாடகைக்கு எடுத்து செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது தெரியவந்தது. ஏற்கனவே கதிரவன் மீது செம்மரக்கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது வனத்துறையினர் 10 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, குற்றவாளியான கதிரவனை தேடி வருகின்றனர்.